இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
இன்று (13) இது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபிவர்தன ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு சார்பாக செயற்படுவதற்கு பதில் ஜனாதிபதியாக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதாக தனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதற்கமைய இலங்கை அரசியலமைப்பின் 34 (01) சரத்தின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.