இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காரைநகருக்கு மேற்கு கடல் பகுதியில் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு எதிராக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.