Home செய்திகள் அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்குமாறு மக்களிடம் முப்படையினரும் வேண்டுகோள்:

அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்குமாறு மக்களிடம் முப்படையினரும் வேண்டுகோள்:

78
0

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம், மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு மக்களிடம் முப்படையினர் சார்பாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையை அமைதியான முறையிலும், அரசியலமைப்பின் பிரகாரமும் தீர்த்துவைப்பதற்கு சந்தர்ப்பம் உருவாகியுள்ள இத்தருணத்தில் நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேந் என இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.