Home செய்திகள் போராட்டங்களால் பதற்றம் அடைந்துள்ள கோட்டாபாய – அவசர அறிக்கை வெளியீடு:

போராட்டங்களால் பதற்றம் அடைந்துள்ள கோட்டாபாய – அவசர அறிக்கை வெளியீடு:

63
0

எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிக்கையில்,

எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் நிதித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெருக்கடியைச் சமாளிக்கவும் தீர்க்கவும் நிறைய திட்டமிடல் மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு, முடிவுகள் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு பெறப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து 44,000 மெட்ரிக் டன் உரம் முதல் சரக்கு நாளை (09) வர உள்ளது.

ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விநியோகம்
உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க பல திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. என ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார்.