கிளிநொச்சி பிரதேசத்திந் கரடிபோக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 35 பரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல், டீசல், மண்ணெய் ஆகிய எரிபொருட்கள் காவல்துறையினரால் (police) மீட்கப்பட்டுள்ளது.
இன்று (03) காலை கிளிநொச்சி காவல்துறை நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமையவே அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மறைத்துவைக்கப்பட்டிருந்த குறித்த எரிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
