நான்கு ஜி7 நாடுகள் ரஷ்ய தங்க ஏற்றுமதியை தடை செய்வதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் கூட்டு நடவடிக்கையாக இந்த தடையை அறிவிக்கின்றன.
இது, “ரஷ்ய தொழிலதிபர்களை நேரடியாக தாக்கி ஜனாதிபதி விளாடிமிர் புடடினின் போர் இயந்திரத்தின் இதயத்தில் தாக்கும்” என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
சர்வதேச தங்க வர்த்தகத்தில் லண்டனின் முக்கிய பங்கு மற்றும் இணையான அமெரிக்க, ஜப்பானிய மற்றும் கனேடிய நடவடிக்கைகளின் அடிப்படையில், “இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியில் இருக்கும், முறையான சர்வதேச சந்தைகளில் இருந்து பொருட்களை தடை செய்யும்” என்று பிரித்தானியா கூறியது.
2021-ஆம் ஆண்டில் ரஷ்ய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக 12.6 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா இப்போது கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டுள்ள நிலையில், நாட்டின் பணக்காரர்கள் நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க தங்கள் சொத்துக்களை தங்கமாக மாற்ற விரைந்துள்ள நிலையில் இப் புதிய தடை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.