Home செய்திகள் எரிபொருள் நிலைய சோதனையில் பொலிசார் தலையிட வேண்டாம் : பொலிஸ் தலைமையகம்

எரிபொருள் நிலைய சோதனையில் பொலிசார் தலையிட வேண்டாம் : பொலிஸ் தலைமையகம்

98
0

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காததால் கோபமுறும் பொருமக்கள் “எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை” திறந்து சோதனையிடுமாறு பொலிஷாரிடம் வலியுறுத்தினாலும் அதில் தலையிட வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.

எரிபொருள் தாங்கிகளை திறப்பது பொலிஸாரின் கடமையல்ல, அதிகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே. போலீசார் தலையிட்டு இவ்வாறு நிலக்கீழ் எரிபொருள் கொள்கலன்களை திறக்க முயன்றால், நாசகாரர்களாலோ அல்லது விபத்தாலோ ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட போலீசாரே பொறுப்பேற்க நேரிடும்.

எனவே, பெட்ரோல் பங்க்களில் உள்ள நிலத்தடி எரிபொருள் சேமிப்பு கொள்கலன்களை திறக்குமாறு, பெட்ரோல் நிலையங்களில் பணியில் இருக்கும் பொலீசாரிடமோ, மற்ற பொலீசாரிடமோ அழுத்தம் கொடுக்க வேண்டாம் என, பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.