தமிழகம் முழுவதும் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி 317 கோடிரூபாவில் புதியதாக வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்துள்ளதாக அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்தார்.
முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமிலுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.