
வர்த்தகர் தம்மிக்க பெரேரா சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது, அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் இராஜினாமவை தொடர்ந்து வெற்றிடமாகிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டில் ஆசனத்திற்கே தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு, பொருளாதார விடயம் தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.