ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை பெற்றுக்கொடுக்கும் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று அந்தத் திருத்தத்தை அமைச்சரவையில் முன்வைத்தார்.
இதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கியுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதன்படி கூடிய விரைவில் இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.