Home உலக செய்திகள் பங்காளதேஷில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 41 பேர் பலி!

பங்காளதேஷில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 41 பேர் பலி!

82
0

பங்காளதேஷில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ள நிலையில் இதுவரை சிறுவர்கள் உள்பட 41 பேர் குறித்த அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக, சில்ஹெட் மற்றும் சுனம்கஞ்ச் ஆகிய இரு மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரு மாவட்டங்களிலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளை இழந்த மக்கள் பள்ளிக்கூடங்களில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.