Home செய்திகள் “கண்ணாடி அம்மா” காலமானார் – இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சிறையில் இருந்து வந்த மகன்!

“கண்ணாடி அம்மா” காலமானார் – இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சிறையில் இருந்து வந்த மகன்!

92
0

தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்காக 26 வருடங்களாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் இன்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

யாழ்ப்பாணம் , திருநெல்வேலியில் வசித்து வந்த குறித்த அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் – வாகீஸ்வரி (கண்ணாடி அம்மா) கடந்த புதன் கிழமை காலமானார்.

“கண்ணாடி அம்மா” என பலராலும் அறியப்பட்ட வாகீஸ்வரி அவர்கள் ஈழ விடுதலைப் போராட்ட ஆதரவாளராக துணிவோடும், அற்பணிப்போடும் செயலாற்ற்றியவர் ஆவார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையின் இறுதிக்கிரிகைக்காக ஒரு மணி நேர இடைவெளியில் வந்த இவர், இன்று தாயின் இறுதிக்கிரகைக்காக 26 வருடங்களின் பின்னர் வந்துள்ளமை அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தமிழ் அரசியல் கைதியாக கடந்த 26 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்தின் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.