எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு இரண்டு வார காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் தற்போது பொதுநிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வீட்டில் இருந்து ஒன்லைன் முறையில் பணியாற்றலாம்.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.