கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, கோட்டை நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.