Home தாயக செய்திகள் இன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

இன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

160
0

இன்றைய தினம் (இரவு 8:00 மணி வரை) இதுவரையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக இலங்கையில் இதுவரையில் 158,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதே வேளை 1,089 பேர் இதுவரையில் குறித்த நோயினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.