Home சினிமா நகைச்சுவை நடிகர் “பாண்டு” காலமானார்:

நகைச்சுவை நடிகர் “பாண்டு” காலமானார்:

373
0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று (06) அதிகாலை தனது 74ஆவது வயதில் காலமானார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டுவின் உயிர் பிரிந்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமான பாண்டு, நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். புகழ் பெற்ற படமான ‘சின்னத் தம்பி’ உட்பட ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ “போக்கிரி” என பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் “சின்னக் கலைவாணர்” விவேக், சிறந்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் ஆகியோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது நடிகர் பாண்டுவும் உயிரிழந்திருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.