Home செய்திகள் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது:

உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது:

127
0

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

கம்பளை கஹடபிடிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். 

புலனாய்வு பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்ட தகவலொன்றுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இளைஞனின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.