புலிகளை மீள உருவாக்க முயன்றதாகவும் குற்றஞ்சாட்டி இன்று (17) அதிகாலை யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவால் (ரிஐடி) நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பால் தெரிவிக்கப்படுகிறது.
இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும், கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வரை இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள் குறித்த நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.