Home செய்திகள் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இ.யோகேஸ்வரன் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இ.யோகேஸ்வரன் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

149
0

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் இ.யோகேஸ்வரன் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நேற்று முந்தினம் நாவற்குழி பகுதியில்  வீடொன்றினுள் புகுந்த திருட்டுக்கும்பல் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடி சென்றிருந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த இ.யோகேஸ்வரன் உள்ளிட்ட இளைஞர்கள் விசாரணைகளை முன்னெடுத்து 12 மணி நேரத்தில் திருட்டு கும்பலை அடையாளம் கண்டு , அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தத்துடன் , களவாட பட்ட பொருட்களையும் மீட்டிருந்தனர். 

இந்நிலையிலையே குறித்த உறுப்பினர் மீது நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலை நாவற்குழி பகுதியில் திருட்டில் ஈடுபட்ட கும்பலோ அன்றி அவர்களை வைத்து செயற்படுத்தும் நபர்களோ மேற்கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.