மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளமையால், புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஒன்று கூடி செயற்பட அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும், சுகாதார வழிகாட்டிகளைக் கட்டாயம் பின்பற்றவேண்டும் எனவும் ஆரம்பச் சுகாதார சேவைகள், தொற்று நோய் மற்றும் கோவிட் தொற்று கட்டுப்பாட்டுத் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி மாதம் மக்கள் ஒன்று கூடியமையால் பெப்ரவரி மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக நடைமுயைில் உள்ள சுகாதார சட்டமுறையில் எதுவும் புத்தாண்டு காலங்களில் தளர்த்தப்படாது எனவும், குறிப்பாக பொதுமக்கள் பெரும்பாலானோர் ஒன்று கூடி செயற்பட அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண் டோபுள்ளே தெரிவித்துள்ளார்.