Home செய்திகள் முதற்தடவையாக 2 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது:

முதற்தடவையாக 2 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது:

164
0

இன்று (05/03) வெள்ளிக்கிழமை முதன்முறையாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த இருவரின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமையவும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டிருந்த நிலையிலும் இன்று (05/03) மாலை 4.00 மணி வரை முதற்கட்டமாக 2 சடலங்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரு சடலங்களும், காத்தான்குடியில் உள்ள மூன்று சடலங்களுமாக ஐந்து முஸ்லிம்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ள்அதோடு, அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரணைதீவில் சடலங்களை புதைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஓட்டமாவடியில் ” மஜ்மா நகரில் ” சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.