
காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சியை எதிர்த்து, காணி உரிமையாளர்களும் சில அரசியல்வாதிகளும் இணைந்து கணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை இன்று (19/2) வளிமறித்து போராட்டம் நடத்தியதன் ஊடாக நில அபகரிப்பு முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அங்கு ஒன்று கூடியவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்பட்டுத்தியதனை அடுத்து நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.