
வடக்கு மாகாணத்தில் நேற்று 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்ய ப் ப ட் டு ள் ள து எ ன வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – வலைப்பாடு கிராமத்தில் மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று
மேற்கொள்ளப்பட்ட 379 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுக
ளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 17 பேருக்குக்
கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 10 பேர் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஏனைய இருவரில் ஒருவர் மன்னார் மாவட்டத்திலும், மற்றுமொருவர் வவுனியா மாவட்டத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.