
இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்றிரவு (18/10) உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொரோனா நோய் சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நிலையில் முதலாவது கொரோனா நோயாளியாக அவர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பிரதேச மருத்துவமனை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனை முன்பாக இன்று காலை முதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
