
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள குறித்த மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தை கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் இன்று (18/10) காலை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன் சிவாஜிலிங்கம்,அருந்தவபாலன் ஆகியோர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வின் போது கட்சி ஆதரவாளர்களால் Golden Fish ஒன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

