
கொழும்பு மாளிகாவத்தை மிரானியா மாவத்தை பகுதியில் மக்களுக்கு உதவி பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட இடமொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அங்கிருந்தவர்களில் அறுவர் (6) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.