
நாளை திங்கள் கிழமை முதல் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மக்கள் சேவைக்கு திறக்கப்படும் என இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்தச் சேவைகளை பெறுவதற்கு மக்கள் முன்கூட்டியே தமக்கான நேரத்தினை தொலைபேசி அல்லது இணையம் மூலமாக முற்பதிவு செய்ய வேண்டும் எனவும், முற்பதிவுகள் வேலை நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு பெறுவதற்கான (ஒருள் சேவை, சதாரண சேவை) விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளுதல், கடவுச்சீட்டில் மாற்றங்கள் செய்தல், பிரஜாவுரிமைப் பதிவுகள் மற்றும் விசா நீடிப்பு போன்ற சேவைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கம், இச் சேவைகளை பெறுவதற்காக பொதுமக்கள் அலுவலகத்திக்கு வரும் போது கண்டிப்பாக சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.