
இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊறடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது உணவுத் தேவைக்காக வெளியே வரும் மக்களிடம் அதிக விலைக்கு மரக்கறிகள் விக்கப்படுவதை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முகமாக மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு வௌியே விற்பனை செய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபாய் மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள அறிவித்தலின் அடிப்படையில்,
கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபாய்,
லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபாய்,
போஞ்சி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபாய்,
கோவா 1 கிலோகிராமின் உச்சப்பட்ச மொத்த விலை 100 ரூபாய்,
பீட்ரூட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 80 ரூபாய்,
கறிமிளகாய் 1 கிலோகிராமின் உச்சப்பட்ச மொத்த விலை 150 ரூபாய்,
தக்காளி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 100 ரூபாய்,
வெண்டைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபாய்,
வாழைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபாய்,
கத்தரிக்காய் 1 கிலோகிராமின் மொத்த விற்பனை விலை 100 ரூபாய்,
தேசிக்காய் மற்றும் இஞ்சியின் அதிகபட்ச மொத்த விலை 150 ரூபாய்,
காய்ந்த மிளகாய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 200 ரூபாய்,