
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி, சர்வதேச ஆதரவுடன் வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழில் இன்று (06/01) திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு கூறுகையில்..
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைக்கு சர்வதேச தீர்வை நாம் கோருகின்றோம். ஆனால் 2 ஆண்டுகள் கால நீடிப்பை அரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே பெற்றுக்கொடுத்தது. இப்போது அந்த காலம் இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைகிறது.
இந்த நிலையில் தற்போது இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்த வெளியேறப்போவதாக கூறுகின்றனர். ஆகவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி, சர்வதேச ஆதரவுடன் வடக்கு- கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவது மட்டுமே தமிழர்களுக்கான சரியான தீர்வாக அமையும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.