
இலங்கையின் அதிபராக பதவியேற்ற கோட்டபாய ராஜபக்ஷ தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றிருந்த நிலையில் அவருக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு அளித்து இந்தியப் பிரதமர் மோடி வரவேற்றார்.
அதந் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு இடையில் இன்று (29/11) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இலங்கையின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புக்காக 400 மில்லியன் டொலர் கடன் வழங்குவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய 50 மில்லியன் டொலர் உதவியையும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.