
கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் தந்தையும் மகனும் தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை சரணடைந்தனர்.
சரணடைந்த இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்ட நிலையில் குற்றவாழிகளை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இக் கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் இடம்பெற்ற இக் கொடூர சம்பவத்தில், 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது-33) என்பவரே கொலை செய்யட்டுள்ளார்.
சகோதரியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற இளைஞன் தனது சகோதரியின் வாழ்க்கையைப் பாழாக்கவேண்டாம் என்று கண்டித்து வந்துள்ளார்.
அத்தோடு இளைஞன் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் கூறியதை அடுத்து அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை செய்துள்ளார்.
இக் கொலையானது சகோதரியின் கணவரின் தந்தையால் இளைஞனைப் பிடித்து வைத்திருக்க சகோதரியின் கணவர் கோடாரியால் கழுத்தில் கொத்தியதுடன், கண்மூடித்தனமாக இளைஞனைத் தாக்கி கொலை செய்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.