
பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று கைத்தாத்திடப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர் இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை மற்றும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு பிரிவில் தற்போது காணப்படும் ஒத்துழைப்பு தன்மைகள்மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.