
விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களான அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று முன்னாள் போராளிகளுமே இவ்வாறு அழைத்துவரப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று குறித்த வழக்கிற்காக குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் பலத்த பாதுகாப்புடன் இலங்கை காவல்துறையினரால் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.