
நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற சகோதரர்களான இளைஞர்கள் இருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில், அவர்களது தந்தைமுறைப்பாடு செய்துள்ளார்.
விஜயசுந்தர் தர்சன் (வயது 19), விஜயசுந்தர் நிதர்சன் (வயது 16) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கண்டுபிடித்துத்தருமாறும் தந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற தமது இரு பிள்ளைகளே காணாமல் போயுள்ளதாக தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
காணாமல் போயுள்ள இருவர் பற்றிய தகவல்களை அறிந்திருப்பவர்கள் 0775415912, 0775261259 ஆகிய தொலைபேசி இலகத்திற்கு அறியத்தருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.