
இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வாகன சாரதி ஒருவர் பலியாகியுள்ளார்.
வத்தளை, ஹுனுப்பிட்டிய பகுதியில் கடற்படையினர் குறித்த காரை சோதனை செய்வதற்காக வழிமறித்த போது, கட்டளையை மீறி பயணித்த வேளை காரின் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதிலேயே 34 வயதுடைய காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.