
தமிழ் அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுயநலம் கொண்டவர்கள் என்றும், தமிழ் மக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே அதிக அக்கறை இருந்ததாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையும் கிடையாது. இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள், இதனை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் தலைவர்களை விட தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர்.
மாகாண சபைத் தேல்தலை நடத்தினால் இவர்களுக்கு 20 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது. இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பேயாகும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுச் சமரின் இறுதித் தருணங்களில் வெள்ளைக் கொடிவிவகாரத்துடன் முக்கிய உரையாடல்களை மேற்கொண்டவர்களில் ஒருவர் பசில் ராஜபக்ச எந்பது குறிப்பிடத்தக்கது.