
ஆளுநர் சுரேன் ராகவனின் வழிகாட்டலில் வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 8.30 மணியளவில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், பல்வேறு கலாசார நிகழ்வுகளுடனான மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று வருகின்றது.
வரலாற்றில் முதன்முறையாக வடமாகாணத்தில் நடத்தப்படும் இந்த பௌத்த மாநாடு, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் கீழான புத்தசாசன அமைச்சு, பிரதேச அரசியல் தலைவர்கள், முப்படையினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.