
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் தமிழக மற்றும் ஈழத் தமிழர் நலன் சார் பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக;
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு.
காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துதல்.
மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்.
காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உடனே மத்திய அரசை வலியுறுத்துதல்.
மற்றும் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையாக விசாரணை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனும் பல முக்கிய விடையங்களோடு அவ் அறிக்கை வெளியாகியுள்ளது.
ஆனால் தேர்தலில் வெற்றபெற்றால் அதன் பின் இவை அனைத்தும் கடைப்பிடிக்கப்படுமா என்பதற்கு கடந்தகால ஆட்சிகளே சாட்சிகளாக கண்முன்னே நிற்கின்றன.