17 தமிழக மீனவர்கள் விடுதலை:

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுவிக்க  மன்னார் நீதவான் நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட 17 மீனவர்களுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலையான 17 இந்திய மீனவர்களையும் மிகிரியான தடுப்பு முகாமில் இருந்து இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *