யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த நபர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த மைக்கல் அன்ரன் சுரேந்திரன் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த நபரின் மனைவி லண்டனிலும், பிள்ளைகள் கொழும்பிலும் வசித்து வருகின்றனர். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டாரில் இருந்து வந்து சகோதரியின் வீட்டில் வசித்து வருகிறார்.
இருப்பினும் கடந்த வாரங்களாக அவர் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். அவரை கைப்பேசியில் அழைத்த நண்பர் அவரை தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் நேற்று மாலை விடுதிக்கு வந்து அறை கதவினை திறந்து பார்த்தவேளை அவர் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டதாக கூறப்படுகிறது.