மீண்டும் கூடியது தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு!

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் மீண்டும் இன்று கூடியுள்ளது.

இதன்போது, யாழ் மாவட்டத்தில் சிறிதரனையும், சுமந்திரனையும் களமிறக்குவதாக தீர்மானிக்கப்பட்டது. இன்னும் ஏழு பேரை வேட்பாளராக நியமிக்க வேண்டிய நிலையில் தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு தொடர்ந்து கலந்துரையாடிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *