பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான கறுப்பின பெண்!

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக் பெற்றுள்ளார்.

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.

அதே சமயம், தொழிலாளர்கள் கட்சி 412 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் பிரித்தானியா நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்தது.

அதுமட்டுமின்றி, 1832-ம் ஆண்டுக்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்வி இதுவாகும்.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை பிரதமர் ரிஷி சுனக் பதவி விலகினார். இந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு இலட்சம் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜென்ரிக்கை தோற்கடித்து, கெமி படேனாக் வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *