பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக குறிப்பிட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை துறந்து நாட்டைவிட்டும் வெளியேறியுள்ள நிலையில், அவரைத் தொடர்புகொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.