நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 08 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களது இரு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.