தையிட்டியில் போராட்டம் நடாத்த கஜேந்திரகுமார் உள்ளிட்ட 27பேருக்கு தடை!

ஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் கட்டளை பெறப்பட்டுள்ளது.

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்படடனர்.

இந்த நிலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்றைய தினம் ஆரம்பமான போராட்டம் இன்று மாலை வரையில் நடைபெற்றது.

இதேவேளை, போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் பொலிஸாரின் தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *