தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று (15) அனுஷ்டிப்பு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் போராளியான விடுதலை அவர்கள் பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் (மேடை அமைக்கப்பட்டிருந்த இடம்) நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *