மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, குறித்த மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்கள் 14 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.