அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்றுச் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக நேற்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் பாராட்டுத் தெரிவித்தார்.