கெஹெலிய ரம்புக்வெல்லவை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு:

‘ஊழல்’ குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை குறித்த குற்றச்சாட்டில் சந்தேகநபராகப் பெயரிட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *