கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களும் காணொளி அழைப்பு ஊடாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (07) ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காணொளி அழைப்பு ஊடாக கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கு இன்றைய தினம் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் இன்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.